சோழிங்கநல்லூர் மாவட்ட மாதாந்திர கலந்துரையாடல்

1 Min Read

சோழிங்கநல்லூர், ஜன. 22- மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகரில் உள்ள தந்தை பெரியார் நூலகத்தில், கடந்த 05.01.2025 அன்று நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை வீரபத்திரன் முன்னிலையிலும், தலைவர் வேலூர் பாண்டு தலைமையிலும் சிறப்பாக நடந்தேறியது.

தீர்மானங்கள்
1. தலைமை கழக அறிவிப்பின்படி மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் 26.12.2024 அன்று நடைபெற இருந்த தெருமுனை கூட்டம், மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. அந்தக் கூட்டத்தை அதே இடத்தில் வேறொரு நாளில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
2. 22.02.2025 அன்று விடுதலை நகரில் நடைபெறவிருக்கின்ற சிலை திறப்பு விழாவிற்கான இறுதி முடிவுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
3. சிலை திறப்பு விழாவிற்கான களப்பணி ஆற்ற குழுக்கள் அமைத்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
4. 70 வயது நிரம்பிய மூத்த தோழர் களுக்கு மரியாதை செய்வது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
5. சிலை திறப்பு விழாவில் வெளியிட இருக்கின்ற AV தயார் செய்ய தோழர் நித்தியானந்தம் அவர்களை நியமித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. மகளிர் அணி தலைவி தோழர் தேவி சக்திவேல் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *