ஒரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை கூட்டம்

viduthalai
1 Min Read

ஒரத்தநாடு, ஜன. 22- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் 13.1.2025 அன்று மாலை 6 மணி அளவில் ஒரத்தநாடு மன்னார்குடி முக்கம் அருகில் வைக்கம் வெற்றி முழக்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

நகர செயலாளர் பு. செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். ஓரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ.சசிக்குமார் தலைமை வைத்து உரையாற்றினார்.

வடக்கு ஒன்றியதலைவர் இரா.துரைராசு. வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன் நகர தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன். மாவட்ட செயலாளர் அ.அருணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ. சுப்பிரமணியன் நகர துணை தலைவர் சக்திவேல், நகர இளை ஞரணி செயலாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.

வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.ராஜதுரை மாநில கலைக்குழு அமைப்பாளர் பி. பெரியார்நேசன் தெற்கு நத்தம்லெட் சுமணன் தி.மு.க மாவட்ட வழக் குரைஞரணி பொருளாளர் தவ.ஆறுமுகம் பாலமுத்தூர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபாபு, ஒரத்தநாடு திமுக செயலாளர் ஷேக் தாவூத் முகமது கனி மற்றும் கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியில் கழக சொற்பொழி வாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்..
நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் சார்பாக பிரபாகரன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *