முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவா? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

viduthalai
1 Min Read

டெல்லி,ஜன.22- முல்லைப்பெரியாறு அணையை நிபுணர் குழு மூலம் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த வழக்குரைஞர் மேத்யூ நெடும்பாரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு, உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி இருப்பதையும் 136 அடியில் இருந்து 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணைக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் இதனை கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *