அரசு மருத்துவமனைகளுக்கு NQAS தேசிய தர உறுதி நிர்ணய திட்டம்

viduthalai
1 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (21.01.2025) சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில், தேசிய தர உறுதி பெற்ற 403 அரசு மருத்துவமனைகளுக்கு NQAS தேசிய தர உறுதி நிர்ணய திட்டம் மற்றும் LaQshya – மகப்பேறு அறை மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டம் மற்றும் MusQan குழந்தைகள் பராமரிப்பு பிரிவு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் தர உறுதி நிர்ணய திட்டங்களின் தேசிய உறுதி சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.ராஜமூர்த்தி மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *