வருமானம் 9,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற அளவு கோலை நீக்கி அரசாணை (G.O. M.S. 72) பிறப்பிக்கப்பட்ட நாள்.
1979இல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை முன்வைத்தார்.
1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இதற்கான ஆணை (M.S. no. 1156) வெளியிடப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
எதிர்பார்த்ததைப் போலவே, தி.மு.கவும் தி.கவும் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்தன. ஆனால், சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் படியே இதனைச் செயல்படுத்துவதாகச் சொன்னார்.
அந்த ஆணையத்தை அமைத்த கலைஞர் தலைமையிலான அப் போதைய தமிழ்நாடு அரசு அந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை. ஆனால், பொருளாதார வரம்பை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர். அரசு, ஏ.என். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையை மேற்கோள் காட்டியதோடு, கேரள அரசின் ஆணை ஒன்றையும் சுட்டிக்காட்டியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற கேரள அரசு 10,000 ரூபாயை வருவாய் வரம்பாக நிர்ணயித்திருந்தது. இதைச் சுட்டிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் பொருளாதார அளவுகோல் முறைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த திராவிடர் கழகம், சமூக ரீதியிலான ஒரு பிரச் சனைக்குத் தீர்வுகாண, பொருளாதார ரீதியிலான ஒரு அளவுகோலை வைப்பது சரியல்ல என்றது.
தமிழ்நாடு முழுவதும் போராட் டங்களையும் நடத்தியது. அந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் அந்த அர சாணை எரிக்கப்பட்டு, சாம்பல் அரசுக்கு அனுப்பப்பட்டது. சென்னையில் மிகப் பெரிய மாநாடு ஒன்றையும் நடத்தியது திராவிடர் கழகம்.
ஜூலை 14ஆம் தேதி பொதுக் குழுவைக் கூட்டிய தி.மு.க. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. பொருளாதார வரையறை செல்லு மென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கிடையில் இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைக்க, அ.இ.அ.தி.மு.க. ஜனதா மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றிபெற முடிந்தது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவும் இதற்கு ஒரு காரணம் எனக் கருதிய எம்.ஜி.ஆர்., 1980 ஜனவரி 19ஆம் தேதி இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள், பொருளாதார அளவுகோலை நீக்கும்படி வலியுறுத்தின.
இதையடுத்து, பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் 9,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை நீக்கி 21.1.1980 அன்று அரசாணை (G.O. M.S. 72) பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர். அதோடு நிற்கவில்லை. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அவரது அரசால் இன்னொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீடு, 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.