இன்றைய ஆன்மிகம்

Viduthalai
1 Min Read

பக்தி போதை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக 6.83 லட்சம் மக்கள் சாமி தரிசனம் – உண்டியல் காணிக்கை ரூபாய் 36 கோடியே 43 லட்சம் என்று ‘இந்து‘ நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
சொர்க்கவாசல் வழியாக நுழைந்த பக்தர்கள் சொர்க்கத்திற்கு போனார்களா என்ற விவரம் தேவை. மீண்டும் வீட்டுக்கு வந்தார்கள் என்றால் அந்த சொர்க்கவாசல் என்பது மாய்மாலம்தானே! உண்டியலில் ரூ. 34 கோடியே 43 லட்சம் கிடைத்தது என்றால், அதன் பின்னணியில் உள்ள உழைப்பு–இப்படியா கரியாக வேண்டும்? பணம் போட்டவர்கள் எல்லாம் கார்ப்பரேட்டுகள் என்று சொல்லிவிட முடியாது சாதாரண மக்களும் கடன் வாங்கி திருப்பதிக்கு செல்வதும், சொர்க்கவாசலில் நுழைவதும், உண்டியலில் பணத்தை போடுவதும் எவ்வளவு அறியாமை! ‘ பக்தி வந்தால் புத்தி போகும்‘ என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய பெரிய உண்மை என்பது விளங்கவில்லையா? உழைப்பு சுரண்டல் என்பது மிகப்பெரிய குற்றமல்லவா? இந்த பணத்தால் கல் முதலாளி ஏழுமலையானுக்கு என்ன லாபம்? ஆறு கால பூஜையில் ஒரு பருக்கையையாவது அவர் உண்டது உண்டா? மக்கள் சிந்திப்பார்களாக.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *