சேலம், ஜன. 20- ‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
நான் எடிட் செய்தது
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போரிட்ட பிரபாகரனுடன் இருப் பது போல் நாம் தமி ழர் கட்சி தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் ஒரு ஒளிப்படத்தை பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த ஒளிப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்,’’ எனக்கூறியிருந்தார். இதனை பார்த்த அரசியல் கட்சியினர், நாம் தமிழர் இயக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியதாவது: நான் கடந்த 2007-2008ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது சீமானு டன் இருக்கும் செங்கோட் டையன் என்பவர் ஒரு நாள் ஒரு டிவிடி.,யில் பிர பாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் இருப்பது போல் 10 படங்களை கொண்டு வந்து கொடுத்தார். அதனுடன் சீமான் படத்தையும் தந்து பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல் ஒரு படத்தை தயார் செய்து தரும்படியும், அந்த படத்தை சீமானுக்கு பரிசாக கொடுக்கப் போவதாகவும் கூறினார். நினைவுப்பரிசாகத் தானே கொடுக்க போகிறார்கள் என எண்ணி, பிரபாகரனுடன் சீமான் கைகளை கட்டிக் கொண்டிருப்பது போல் படத்தை எடிட் செய்து சேர்த்தேன்.
அதைத் தான், தற்போது சீமான் பயன்படுத்தி வரு கிறார். அந்த படத்தில் சீமானுக்கு ஷேடோ (நிழல்) இருப்பது போல் செய்திருப்பேன். ஆனால், பிரபாகரன் படத்திற்கு பின்னால் ஷேடோ (நிழல்) இருக்காது. அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம். இது நான் எடிட் செய்தது என்பதால், முழுமையாக தெரியும். இதை தற்போது நான் கூறுவதற்கு காரணம், சீமான் பெரியார் பற்றி பிஜேபி எண்ணங்களை பேசி அசிங்கப்படுத்தி வரு கிறார்.
அதனால் தான், அந்த படத்தின் உண்மைத் தன்மையை வெளியே கூறியிருக்கிறேன். சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் பற்றி தவறாக பேசுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. இப்பவும் உண்மையை சொல்லவில்லை என்றால், இப்படி பேசாமலே இருந்து விட்டோமே என்ற எண்ணம் என்னை வாட்டும். அத னால்தான், அந்த படம் நான் எடிட் செய்த படம் என்ற உண்மையை கூறி யிருக்கிறேன். இவ்வாறு ராஜ் குமார் கூறினார்.