சென்னை ஓஎம்ஆர் சாலையில் புதிய மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

1 Min Read

சென்னை,ஜன,20- சென்னை, ஓஎம்ஆர் சாலையில் புற்றுநோயியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் 400க்கும் அதிகமான படுக்கை வசதியுடன் அய்ஸ்வர்யா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திறப்பு விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட இலவச இதய அறுவை சிகிச்சைகளை செய்ய இருப்பதாக இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகர் சிவக்குமார், அய்ஸ்வர்யா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் டாக்டர் கே.வேலுசுவாமி, நிறுவனர் டாக்டர் எஸ்.சந்திரலேகா மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அருண் முத்துவேல் ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 100 இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத்தை துவக்கி வைத்தார்.
12 மாடிகளுடன் ஓஎம்ஆர் சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், அதிநவீன மருத்துவ தொழில் நுட்பத்துடன் கூடிய 14 அறுவைச் சிகிச்சை அறைகள் உள்ளன, மேலும் 72 மருத்துவ சேவைத் துறைகளும் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *