சென்னை ஓஎம்ஆர் சாலையில் புதிய மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

viduthalai
1 Min Read

சென்னை,ஜன,20- சென்னை, ஓஎம்ஆர் சாலையில் புற்றுநோயியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் 400க்கும் அதிகமான படுக்கை வசதியுடன் அய்ஸ்வர்யா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திறப்பு விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட இலவச இதய அறுவை சிகிச்சைகளை செய்ய இருப்பதாக இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகர் சிவக்குமார், அய்ஸ்வர்யா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் டாக்டர் கே.வேலுசுவாமி, நிறுவனர் டாக்டர் எஸ்.சந்திரலேகா மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அருண் முத்துவேல் ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 100 இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத்தை துவக்கி வைத்தார்.
12 மாடிகளுடன் ஓஎம்ஆர் சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், அதிநவீன மருத்துவ தொழில் நுட்பத்துடன் கூடிய 14 அறுவைச் சிகிச்சை அறைகள் உள்ளன, மேலும் 72 மருத்துவ சேவைத் துறைகளும் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *