நம்ம ஊரில் திருமணம் ஆனாலே, படிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவது பொதுவான வழக்கம். ஆனால், சவுதி அரேபியாவில் ஒரு பெண், திருமணத்துக்கு பின்பும் படிப்பை தொடர்ந்து, பி.எச்டி. படிப்பு முடித்துள்ளார். அவர் இதற்கிடையில் 19 குழந்தைகள் பெற்றுள்ளார். பகலில் வேலை, குழந்தைகள் பராமரிப்பு, இரவில் படிப்பு என்று தன் கடமைகளில் தவறாமல் இருந்து 40 வயதில் மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். இவரின் விடாமுயற்சியை வாழ்த்தலாமே.