செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

8ஆவது ஊதிய குழு அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் 16.1.2025 அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 8ஆவது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

தொழில் நுட்ப கண்காட்சி

சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து தேசிய அளவிலான தொழில் நுட்பக் கண்காட்சியை (இன்வென்டிவ் 2025) பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் நடத்துகிறது.

கடிதம் எழுதும் போட்டி

தேசிய அளவில் அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. ‘‘எழுதுவதில் மகிழ்ச்சி: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’’ என்ற தலைப்பில் போட்டி நடைபெற உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதி னரும் கலந்து கொள்ளலாம். கடிதத்தை தலைமை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 2 என்ற முகவரிக்கு
ஜன.31–க்குள் அனுப்புமாறு அஞ்சல்துறை கூறி யுள்ளது.

சுங்க கட்டணத்துக்கு பதிலாக
மாதாந்திர பாஸ்

செய்திச் சுருக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் மொத்த சுங்க கட்டணத்தில், வர்த்தக வாகனங்கள் மூலம் 74 சதவீத பணம் கிடைக்கிறது. பயணிகள் வாகனங்கள் மூலம் 26 சதவீத பணம்தான் கிடைக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்துக்கு பதிலாக, மாதாந்திர, வருடாந்திர பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்துவதுபற்றி ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது என ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் இல்லாமல் விசாரணையை எதிர்கொள்ள வற்புறுத்தக் கூடாது

செய்திச் சுருக்கம்

எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் எவரை யும் விசாரணையை எதிர் கொள்ள வற்புறுத்தக் கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை எரிவாயு மூலம்
இயங்கும் வாகனங்கள் அதிகரிப்பு

செய்திச் சுருக்கம்

புதுடில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்கள் அதிகளவு உள்ளன.
அதுபோல் தற்போது தமிழ்நாட்டில் சென்னை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி நகரங்களில் அதிகபடியான வாகனங்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாறியிருக்கிறது.

பெட்ரோல், டீசலில் கிடைக்கும் மைலேஜைவிட கூடுதலாக 30 முதல் 45 சதவீத மைலேஜ் கிடைப்பதால் மக்கள் மாறுகின்றனர். அதுவும் டூவீலருக்கு 100 கிலோ மீட்டர் இயக்க முடிகிறது. வரும் காலத்தில் 100–க்கு 50 சதவீத வாகனங்கள் சி.என்.ஜி. வாகனங்களாக மாற்றம் பெறும் என இந்தியன் ஆயில் நிறுவனம் இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *