பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றியது ‘திராவிட மாடல்’ அரசு! அமைச்சர் மதிவேந்தன்

viduthalai
4 Min Read

சென்னை, ஜன. 18 – மருத்துவ,பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றிவிடுகிறது திராவிட மாடல் அரசு என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மரு.மதிவேந்தன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மரு.மதி வேந்தன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–

பிரிக்க முடியாதவை

திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாறும் பிரிக்க முடியாத உறவை கொண்டவை. நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டு, இந்திய சட்டமன்ற வரலாற் றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. 1928 ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் நிரந்தர மாக்கப்பட்டது. இதனால், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு உரிமை அனைத்துத்தரப்பு மக்க ளுக்கும் கிடைத்தது. அந்த நீதிக் கட்சியின் நீட்சிதான் தி.மு.க. அரசு. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்களை கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் தளத்தில் வலிமையுள்ளவர்களாகவும், வளர்ச்சி அடைந்தவர் களாகவும் உயர்த்த வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் முதன்மை இலட்சியமாகும்.

இந்த இலட்சியப் பயணத்திற்கு பாதை அமைத்து தரும் இடஒதுக்கீட்டு உரிமைகள் திராவிட முன் னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த கால மெல்லாம் உணர்வுப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது வரலாறு. பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் சமூகநீதி உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தி.மு.க. அரசு பல்வேறு வகையான இட ஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறுபடைத்துள்ளது.

சமத்துவ நோக்கம்

சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவேண்டும் எனும் சமத்துவ நோக்கோடு தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையி லிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது வழங்கினார் முத்தமிழறி ஞர் கலைஞர். அதுவரையிலும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான ஒதுக்கீட்டில் முழுமையாக பலனை அடையாத சமூகமாக அருந்ததியர் சமூகம் இருந்து வந்தது. இதனை அப்பொழுது ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் உறுதிப்படுத்தியிருந்தது.

உள் ஒதுக்கீடு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய உள் ஒதுக்கீட்டின் பயனால் அதுவரை கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்து வம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், இன் றைக்கு உரிய பிரதிநிதித் துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பதை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தி யிருக்கின்றன.

மருத்துவக் கல்வியில் அருந்ததி யர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி 2018-–2–019 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. திராவிட மாடல் ஆட்சியில் 2023-–2024 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள்.

பல் மருத்துவ படிப்பை பொறுத்த வரை 2018-–2019 ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் அருந்ததியர் சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 16 இடங்களே! அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை கூட முழுமையாக பூர்த்தி செய்ய இயலாமல், 1.5 விழுக்காடு அருந்ததியர் சமூக மாணவர்கள் மட்டுமேபல் மருத்துவம் பயின்றார்கள். இந்த அவநிலை 2023-–2024 ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மாற்றமடைந்தது. 1,737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 54 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்க ளுக்கான 3 விழுக்காடு பிரதிநிதித்து வம் முழுமையாக கிடைத்தது.

உயர்வு

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை 2009-2010 ஆம் ஆண்டில் 1,193 இடங்களை பெற்றிருந்த அருந்ததியர் நிலை, 2023-–2024 ஆம் ஆண்டில் 3,944 இடங்களை பெற்று உயர்ந்துள்ளது.

ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததி யர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-–2017 ஆம்ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்த நிலையில், 2023-–2024 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 84 விழுக்காடு பயன டைந்து வருகின்றனர்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய போது, ‘’அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என அன்றைக்கு சொன்ன வர் ஜெயலலிதா. உள் ஒதுக்கீடு வழங்கி விட்டு அமைதியாக இருக்காமல், அதற்கான தடைகளை தகர்த்து சட்டப் போராட்டங்களை உச்சநீதிமன்றம் வரையில் போராடியது திமுக. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

படிகளில் ஏற்றி… 2008 நவம்பர் 23 ஆம் தேதி கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையில், கழிவுற்ற மலத்தைக் கைகளில் அள்ளி –
கண் கலங்க ஒரு தொழிலாளி; தலையில் சுமந்து தன் நிலையை நினைத்து நடக்கும் காட்சி இன்னமும் நடக்குதே நாட்டில்!
தலையில், கையில் மலம் தூக்கு வோர் தலைவிதி மாற்றிட தலையில் தூக்கி சனார்த்தனம் அறிக்கையை வைத்துக்கொண்டு ஆடுகின்றேன் நான் பள்ளத்தில் கிடப்போரைப் படி களில் ஏற்றி வைக்க; பணி புரிவோம் தொடர்ந்து! பகுத்தறிவைத் துணை கொண்டு நடந்து! எனக் குறிப்பிட்டார். அந்த பகுத்தறிவைத் துணைக் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, எடுத்த முன்னெடுப்புகளால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றதோடு, அருந்ததியர் சமூகத்தினர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உரிய பிரதிநிதித்துவத்தையும் பெற்றிருக்கிறார்கள். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெரு மிதத்தோடு செயல்படுகிறது ‘திராவிட மாடல்’ அரசு. சமூக நீதிக்கான இலட்சி யப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல்.
இவ்வாறு அமைச்சர் மரு.மதிவேந்தன் தனது அறிக்கையில் கூறி யுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *