பட்டம் விடும் அமைச்சர் பலியான உயிர்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பட்டம் விட்டு மகிழ்ந்த அமித்ஷா என்று ஒரு பக்கம் செய்தியும், மறுபக்கம் பட்டம் விட்டதால் கழுத்து அறுபட்டு 6 பேர் உயிரிழந்த செய்தியும் வந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுடன் இணைந்து அமித்ஷா பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
குஜராத்தில் உத்தராயண் விழாவின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தின் பஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் நகரில் குர்னால் பர்மர் (வயது 4) என்ற சிறுவன் தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றான்.

அப்போது பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவன் குர்னாலின் கழுத்தை அறுத்தது. இதில் அச்சிறுவன் உயிரிழந்தான். அதேபோல், மஹாசனா மாவட்டம் வட்பார் பகுதியை சேர்ந்த மன்சாஜி (வயது 35) தனது தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயமடைந்த மன்சாஜி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதே போல் சுமார் 700 க்கும் மேற்பட்ட காகம், புறா, மைனா, கிளி, நாரை, உள்ளிட்ட பல பெரிய பறவைகள் பட்டம் விடப்பட்ட போது நூலில் அறுபட்டு உயிரிழந்தன. மேலும் காயமடைந்த ஆயிரக்கணக்கான பறவைகளை எடுத்துச்சென்று கால்நடை மருத்துவமனைகளில் தொண்டமைப்பினர் ஒப்படைத்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *