சுயமரியாதைச் சுடரொளி வசந்தம் இராமச்சந்திரன் வாழ்விணையர் மறைவு

1 Min Read

சுயமரியாதைச் சுடரொளி, கோவை மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் கோவை வசந்தம்  கு. இராமச்சந்திரன் அவர் களின் வாழ்விணையர் ரங்கநாயகி அம்மாள் இன்று (17.1.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தம் வாழ்விணையர் இராமச்சந்திரன் அவர்களோடு கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தவறாதவர். வசந்தம் இராமச்சந்திரன் அவர்கள் மறைந்தபோதும், அவரது உடல் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது போலவே இவரது உடலும் மருத்துவமனைக்குக் கொடை யாக வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *