சுயமரியாதைச் சுடரொளி, கோவை மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் கோவை வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர் களின் வாழ்விணையர் ரங்கநாயகி அம்மாள் இன்று (17.1.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தம் வாழ்விணையர் இராமச்சந்திரன் அவர்களோடு கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தவறாதவர். வசந்தம் இராமச்சந்திரன் அவர்கள் மறைந்தபோதும், அவரது உடல் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது போலவே இவரது உடலும் மருத்துவமனைக்குக் கொடை யாக வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.