தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணிகளுக்கு தகுதி நிர்ணயம்

1 Min Read

சென்னை, ஜன.17 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதிவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் பணி

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது: தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கும் அவற் றுக்கான பதவி உயர்வுக்கும் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச பொது கல்வித்தகுதி (எஸ்எஸ்எல்சி தேர்ச்சி) அவசியம். பதிவுறு எழுத்தர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணி யில் இருந்திருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் இளநிலை உதவியாளர் வேலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இந்த தகுதி, அலுவலக உதவியாளர் நிலையில் இருந்து இள நிலை உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கும் பொருந்தும்

கல்வித் தகுதி

டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப் படும் உதவியாளர் பத விக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ண யிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்து உரிய துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவியாளராக பதவி உயர்வுபெற தகுதியுடை யவர் ஆவார். டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் நேர்முக எழுத்தர் (பி.சி) பதவிக்கு பட்டப்படிப்பும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் ஹையர் கிரேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மாநில தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சியும் அவ சியம். இவ்வாறு அந்த அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *