சென்னை, ஜன.17 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதிவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் பணி
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது: தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கும் அவற் றுக்கான பதவி உயர்வுக்கும் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச பொது கல்வித்தகுதி (எஸ்எஸ்எல்சி தேர்ச்சி) அவசியம். பதிவுறு எழுத்தர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணி யில் இருந்திருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் இளநிலை உதவியாளர் வேலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இந்த தகுதி, அலுவலக உதவியாளர் நிலையில் இருந்து இள நிலை உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கும் பொருந்தும்
கல்வித் தகுதி
டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப் படும் உதவியாளர் பத விக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ண யிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்து உரிய துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவியாளராக பதவி உயர்வுபெற தகுதியுடை யவர் ஆவார். டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் நேர்முக எழுத்தர் (பி.சி) பதவிக்கு பட்டப்படிப்பும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் ஹையர் கிரேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மாநில தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சியும் அவ சியம். இவ்வாறு அந்த அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.