கடலூர், ஜன.17 கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் 12 1 2025 அன்று மாலை 5 மணி முதல் ஏழு முப்பது மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் நடைபெற்றது.
கழக மகளிர் அணியைச் சேர்ந்த முனியம்மாள், சத்தியாவதி, கலைச்செல்வி, குணசுந்தரி, மங்கல லட்சுமி, திராவிட மணி, புவனேஸ்வரி, அன்புக்கரசி, கீதா, மதிவதனி, எழில்வதனி, ரேணுகா, அன்புச்செல்வி, ஜெயசிறீ, ஹரிதா, தமிழ், ஏந்தி ஆகியோர் புதுப் பானை, புத்தரிசி, செங்கரும்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் கொண்டு அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கி வந்த வேளையில், ‘‘பொங்கலோ பொங்கல், திராவிடர் பொங்கல், சமத்துவ பொங்கல், எழுச்சி பொங்கல், பகுத்தறிவு பொங்கல்’’ என்று முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், அறிவாளன், அசோக், உதயசங்கர், வேலு, வேணுகோபால், செந்தில், வேல், செல்வராசு, தீபக்ராஜ், கோபால், ரங்கசாமி, பாஸ்கர், குணசேகரன், சாக்ரடீஸ், அறிவுச்செல்வன், சேகர், தீன மோகன், திருநாவுக்கரசு, முருகன், புலவர் ராவணன், டிஜிட்டல் ராமநாதன், நூலகர் கண்ணன், சொ. தண்டபாணி, மணிவேல் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கலும், தேநீரும் வழங்கப்பட்டது.
பொங்கல் கருத்தரங்கம்!
கழக மகளிரணி தமிழேந்தி தலைமையில் அரித்தா வரவேற்புரை ஆற்ற, முனியம்மாள், கலைச்செல்வி, சத்தியா, குணசுந்தரி, கீதா ஆகியோர் முன்னிலை வகிக்க, கருத்தரங்கம் தொடங்கியது.
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘‘தமிழர் திருநாள் எனும் திராவிடர் பெருநாள் பொங்கல், அதன் தோற்றம் சிறப்பு வரலாறு’’ பற்றி எல்லாம் விளக்கமாகப் பேசி, தந்தை பெரியார் அவர்களால், தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய விழா ‘‘பொங்கல் விழாவே’’ என்று பறைசாற்றியதை விளக்கியும், தமிழர்களின் தன்மானத்தை மீட்டு சமத்துவம், சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை என பல்வேறு தளங்களில் அரிய பெரிய சாதனைகளை நிகழ்த்திய தந்தை பெரியார் அவர்களை சில நாகரிகமற்ற, விலைபோன மனிதர்கள் மலினப்படுத்த முடியாது என்பதை எடுத்துரைத்தும் கருத்தரங்க உரையாற்றினார்.
கழக மாவட்டத் தலைவர் தண்டபாணி கழக மாவட்ட அமைப்பாளர் மணிவேல் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் திமுக செல்வராஜு ஆகியோரும் உரையாற்றினர். நிறைவாக தோழர் விஜயா நன்றி கூறினார்.