கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.1.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* “இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வழிபாட்டுத் தலங்கள் சட்டம் (POWA) அவசியம்” என்று வாதிட்டு, 1991 சட்டத்தின் அரசமைப்பு செல்லுபடியை எதிர்த்து நிலுவையில் உள்ள மனுக்களில் தலையிட அனுமதி கோரி காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சிறுபான்மையினர் குறித்து பேசி சர்ச்சைக்குள்ளான அலகாபாத் நீதிபதி சேகர் குமார், தான் தவறாக எதுவும் பேசவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம். டிசம்பர் 17 அன்று இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியத்துடன் நீதிபதி யாதவ் நடத்திய சந்திப்பை தொடர்ந்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பன்சாலி, நீதிபதி யாதவின் பதிலைக் கோரியிருந்தார்.

* நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி வலி யுறுத்தியுள்ளது. ஒடிசாவின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: குற்றவாளிகளின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றிய குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை பிப்ரவரி 13 ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது

* ‘வரலாற்றை சிதைக்கும் முயற்சி’: பகவத்தின் ‘உண்மையான சுதந்திரம்’ அயோத்தியில் ராமன் கோவில் கட்டியதற்கு பிறகு தான் நாட்டிற்கு உண்மை யான சுதந்திர தினம் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு மம்தா கண்டனம்.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *