இந்நாள் – அந்நாள் (17.1.1968) சுயமரியாதைத் திருமணம் சட்டமானது

viduthalai
2 Min Read

இந்தியாவில் வேதமுறைப்படி பெண்களை கிட்டத்தட்ட போகப் பொருளாகவும், அடிமைகளைப் போல் நடத்தி பெண்ணின் மனநிலையை அறியாமலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது. இத்திருமணம் பார்ப்பனர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது. இப்படி செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது. கிட்டத்தட்ட பெண் என்பவள் சந்தையில் விலைக்கு விற்கப்படும் மாடுகளைப் போன்றே அக்காலகட்டத் திருமணங்களில் நடத்தப்பட்டார்.

இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு, பார்ப்பனர்களின் குடும் பத்தில் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துமுடித்து கண வனின் வீட்டிற்கு அனுப்பும் நடை முறையும் இருந்துள்ளது.
இப்படி அனுப்பிய ஒரு 10 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைக்கமுயன்று அந்தச்சிறுமி உயிரிழந்த நிகழ்வு 1890 களில் இந்தியாவையே உலுக்கியது

அந்தக் கொடூரத்திற்கு பாலகங் காதரத் திலகர் ஆதரவு கொடுத்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
1890 ஆம் ஆண்டில் 30 வயதான ஏற்கெனவே மனைவியை இழந்த ஹரி மைத்தி என்ற வங்கப் பார்ப்பானுக்கு பீகாரைச் சேர்ந்த ஏழைப் பார்ப்பனர் தனது 10 வயது மகளான புல்மைத்தி என்ற சிறுமியை திருமணம் செய்து கொடுத்தார். சிறுமியின் வீட்டிலேயே வலுக்காட்டயமாக உடலுறவு கொண்டபோது சிறுமி புல்மோனி அதீத உதிரப் போக்கு ஏற்பட்டு இறந்துபோனார். இந்த நிலையில் ஆங்கிலேய அரசாங்கம் இந்த நிகழ்வை மிகவும் கொடூர நிகழ்வாகக் கருதி சாட்சிகளை அழைத்தது. ஆனால் சாட்சிசொல்ல யாருமே செல்லாத நிலையில் பாலகங்காதர திலகர் அந்தப் பார்ப்பானுக்கு ஆதரவாக தனது மராட்ட இதழில் இவ்வாறு எழுதுகிறார். “ஹரி மைத்தி தனது முதல் மனைவியை இழந்து சோகத்தில் இருக்கிறார். அதே போல் தனது இரண்டாவது மனைவியை இழந்திருக்கும் `அவர் மீது குற்றம் சொல்ல வேண்டாம்’ சாட்சி சொல்பவர்கள் மனசாட்சியை கொஞ்சம் கேளுங்கள்” என்று திலகர் கேட்டுக் கொண்டார் (The Mahratta, 10 August 1890, The Calcutta Child-Wife Murder Case, Editorial).

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்” போன்றதுதான் இந்த நிகழ்வு. நாடு முழுவதும் இதுபோன்ற பல கொடூரங்கள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன. இந்தக்கொடூரங்களுக்கு முடிவுகட்ட மதக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் உடைத்தெறிந்து சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் தந்தைபெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தத் திருமணத்திற்கு நீதிமன்றத்தாலும், பார்ப்பனர்களாலும் பல தடைகள் தொடர்ந்து போடப்பட்டு வந்தன

1955 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட ஹிந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியேற்ற அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமண த்திற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 17.01.1968இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று 20.01.1968ல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *