தருமபுரி – மாரவாடி கிராமத்தில் எருமைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

viduthalai
1 Min Read

தருமபுரி, ஜன. 17- பல நூற்றாண்டுகளாக பொங்கல் விழாவில் பசுமாடுகள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகின்றன. ஏனோ எருமை மாடுகள் கொண் டாடப்படுவதே இல்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொங்கல் விழாவின்போது எருமை மாடு களையும் மாலையிட்டு கொண்டாட வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அதற்கு இணங்க, பொங்கல் விழாவில் மாரவாடி கிராமத்தில் எருமை மாடுகள் 16.1.2025 அன்று மாலை அணிவித்து கொண் டாடப்பட்டன.

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), ஊமை மு கணேசன் திமுக, ஊமை மு. சக்கரை திமுக ஒன்றிய துணைச் செயலாளர், கே.ஆர்.ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சி, வழக்குரைஞர் பிரதீபா ஜெயபால் விபி சிங் மூர்த்தி திராவிடர் கழக இளைஞர் அணி, தோழர்கள் கோ.சந்திர போஸ், ம.செம்மல் வீரமணி திராவிட கழக மாணவர் கழகம், அருண்குமார் மாணவர் கழகம், ஊமை அ.பிர பாகரன் எம்.ஆர்.ஆர்.சி. பொறுப்பாளர், பெரியார் பிஞ்சுகள், அன்பு மதி அன்பெழில் இராவணன் மகிழினி மற்றும், ஊமை மு. மலர்க்கொடி மகேஸ்வரி கணேசன், வேலு காவேரி அம்மாள் சின்னவன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *