மறைவு

1 Min Read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், புதுத்தெரு, பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், குன்னூர் புள்ளியியல் ஆய்வாளருமான ரா.திருநாவுக்கரசு (வயது 42) 12.1.2025 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இறுதி நிகழ்ச்சி 15.1.2025 அன்று நடைபெற்றது. செய்யாறு மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், நகரத் தலைவர் தி.காமராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன், என்.சீனுவாசன், என்.கஜபதி, க.கோவேந்தன் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்க முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். குன்னூரில் மறைந்த ரா.திருநாவுக்கரசுவின் விருப்பப்படியே தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டு, கருப்புச் சட்டை அணிவித்து, திராவிடர் கழக கொடியும் போர்த்தப்பட்டிருந்தது. பெரியார் மருத்துவ குழுமத்தின் தலைவர் மருத்துவர் குன்னூர் இரா.கவுதமன் அவர்கள் மறைந்த திருநாவுக்கரசு உடல் மருத்துவ பரிசோதனை முடித்து செய்யாறு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– – – – –

மறைவு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், மாதவராயன்பேட்டை யைச் சேர்ந்த செய்யாறு மாவட்ட திரா விடர் கழக அமைப்பாளர் பட்டுசேலை உற்பத்தியாளர் ஆரணி ஏ.அசோகனின் தந்தையார், பெரியார் பெருந்தொண்டர் க.ஏகாம்பரம் (வயது 95) 14.1.2025 அன்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தகவலறிந்து செய்யாறு நகர கழக தலைவர் தி.காமராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன், குன்னூர் இரா.வாசுதேவன், ஆரணி இராவண அதியமான், ஆரணி வெங்கட்ராமன் உள்பட பலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். ஆரணி பட்டு உற்பத்தியாளர்கள், வியாபார பிரமுகர்கள், உறவினர்கள் என பலதரப்பட்டவர்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *