சர்க்கரை நோய் வாய்ப்பை தடுக்கும் பிஸ்தா

1 Min Read

சென்னை, ஜன.17 உணவுக்கு முன்பாக பிஸ்தா உட்கொண்டால் ரத்த சா்க்கரை அளவு குறைவது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சா்க்கரை நோய்க்கும், பிஸ்தாவுக்கும் இடையேயான தொடா்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த மய்யத்தின் தலைவா் டாக்டா் வி.மோகன் கூறியதாவது:

தொற்றா நோய்களில் உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவது சா்க்கரை நோய்தான்.

இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு அந்த பாதிப்பு உள்ளது. இதைத் தவிர, 13.6 கோடி போ் சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனா். அவா்களில் சிலரைத் தோ்வு செய்து நாள்தோறும் காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பாக தலா 30 கிராம் பிஸ்தா வழங்கினோம். 12 வார கால ஆராய்ச்சிக்குப் பிறகு அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவா்களது ரத்த சா்க்கரை அளவு குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாது இடுப்பின் சுற்றளவும், பிற கொழுப்புகளும் 10 சதவீதம் வரை குறைந்திருந்தது.
பிஸ்தா உட்கொண்ட பிறகு டைப்-2 சா்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே அவா்களுக்கு காணப்பட்டன. பன்னாட்டு புகழ் பெற்ற ஜா்னல் ஆஃப் நியூட்ரிஷியன்ஸ் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *