திருப்பதி கோவிலுக்குச் சென்று வந்தவர்களின் பேருந்து லாரி மீது மோதியதில் விபத்து: 4 பேர் உயிரிழப்பு

1 Min Read

சித்தூர், ஜன.17 திருச்சியைச் சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் 15.1.2025 அன்று ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று (16.1.2025) கோவிலில் வழிபாடு செய்துவிட்டு இரவில் திருச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *