கல்விச் சுற்றுலா – பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி

1 Min Read

வெட்டிக்காடு,ஜன.16- வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்விச் சுற்றுலா இடம் பெற்றது.
21.12.2024 அன்று மழலையர் பிரிவில் பயிலும் 58 மாணவர்கள் 6 ஆசிரியர்கள் தஞ்சையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் சிவகங்கைப் பூங்காவிற்கு சுற்றுலா சென்று மகிழ்ந்தனர்.

24.12.2024 அன்று முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் 72 மாணவர்கள், ஆசிரியர்கள் ஆறுபேரும் ஒரத்தநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால், சிவகங்கைப் பூங்கா சென்று தமிழர்களின் சிறப்புகளைக் கேட்டும், பார்த்தும் அறிந்து கொண்டனர்.

பத்தாம் வகுப்பில் பயிலும் 14 மாணவர்கள், பள்ளியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று பயனுள்ள நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.

30.12.2024 அன்று 118 மாணவர்கள் 15 ஆசிரியர்கள் காலை 6 மணிக்கு வெட்டிக்காட்டில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி நிலையம் மற்றும் அருங்காட்சியகத்தையும் , மதுரையில் உள்ள நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றையும் கண்டு களித்தனர்.

பணியாளர்கள் மூவரும் உடன் உதவிக்கு வந்திருந்தனர். சுற்றுலா மூலம் தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சுவடுகள், அறிவியல் செயல்பாடுகள் என அனைத்தையும் அறிந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *