மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் தி.மு.க. ஆட்சி பற்றி தவறான தகவல் ஒன்றிய அமைச்சரே ஒப்புதல்

2 Min Read

மதுரை, ஜன. 16- மதுரை -– தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடச் சொல்லவில்லை என ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார்.

கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை -– அருப்புக்கோட்டை -– தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அது கைவிடப்பட்டது’’ என்று அதிர்ச்சிக்குரிய தகவலை தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் ஒருபோதும் கூறவில்லை. கூடுதல் நிதி ஒதுக்கவே கேட்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ரயில்வே அமைச்சரின் பேட்டியை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக தரப்பிலும் அறிவிப்புகள் வெளியாகின.

புது விளக்கம்

இந்நிலையில், புதிய ரயில் திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என ஒன்றிய அமைச்சர் திடீர் பல்டி அடித்துள்ளார். ‘‘ரயில்வே அமைச்சரிடம் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி தனித்தனியாக கேள்விகளை ஒரே நேரத்தில் செய்தியாளர்கள் கேட்டதால், அதிக சத்தம், குழப்பம் ஏற்பட்டு விட்டது.
மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி ஒரு செய்தியாளர் கேட்டபோது, ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது ஒன்றிய அமைச்சரின் காதில் தனுஷ்கோடி என்று பதிவாகியது. நில ஆர்ஜிதம், சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக ராமேசுவரம் -– தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிடும் கோரிக்கை வந்ததால், மாற்றி கூறி விட்டேன்’’ என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது புது விளக்கமளித்துள்ளார்

வதந்தியை நம்பி

தொட்ர்ந்து வதந்தியைப் தாங்களே பரப்பி அதை வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பழக்கப்பட்ட அண்ணாமலை போன்றவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் செய்த தவறுக்கு தமிழ்நாடு அரசை எதிர்த்து ஆர்பாட்டம் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை நிகழ்வு, உள்ளிட்ட பல பிரச்சினைகளை இவர்களாகவே அதற்கு மதச்சாயம் பூசி வதந்திகளைப் பரப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

தற்போது ஒன்றிய அரசு சார்பில் ரயில்வே அமைச்சர் கூறிய தவறான தகவலை நம்பி ஆர்பாட்டம் அறிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *