சென்னை, ஜன.16 சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது.
நீர் நிலைப்பகுதிகளில் கோவில், மசூதி, சர்ச், வீடு என எவை ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தாலும் அதனை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தவிட்டுள்ளன. கெருகம்பாக்கத்தில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அதன் முன் பகுதியை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவிலின் முன்பகுதியை இடித்து அகற்றினார்கள்.