மாங்காடு அருகே ஆக்கிரமிப்பு கோயில் அகற்றம்

1 Min Read

சென்னை, ஜன.16 சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது.

நீர் நிலைப்பகுதிகளில் கோவில், மசூதி, சர்ச், வீடு என எவை ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தாலும் அதனை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தவிட்டுள்ளன. கெருகம்பாக்கத்தில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அதன் முன் பகுதியை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவிலின் முன்பகுதியை இடித்து அகற்றினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *