12.01.2025 அன்று உலக அயலக தினம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், வைக்கம் போராட்டம் ஆகிய இரு நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான ச.கமலக்கண்ணன் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
விருது பெற்ற கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்தும்,பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவருக்கும், மற்றொரு தோழரான ரா.செந்தில்குமார் அவர்களுக்கும் திராவிடர் கழகம் ஏற்கெனவே பாராட்டிச் சிறப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.