திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!

0 Min Read

12.01.2025 அன்று உலக அயலக தினம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், வைக்கம் போராட்டம் ஆகிய இரு நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான ச.கமலக்கண்ணன் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

விருது பெற்ற கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்தும்,பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவருக்கும், மற்றொரு தோழரான ரா.செந்தில்குமார் அவர்களுக்கும் திராவிடர் கழகம் ஏற்கெனவே பாராட்டிச் சிறப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *