புதுச்சேரி, ஜன. 13- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து வழக்கம் போலவே இவ்வாண்டும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாவை 11-01- 2025 சனிக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பகுதி முழுவதும் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறக்க விடப்பட்டது. புதுச்சேரி மாவட்டத் கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், மேனாள் மாவட்டக் கழகச் செயலாளர் கி.அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
பொங்கல் அடுப்பு ஏற்றப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கையில் கழகத்தின் பொறுப்பாளர்களும், அரசியல், சமூக அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
காலாப் பட்டு தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தி.சரஸ்வதி, ம.தி.மு.க. செல்வராஜ், அரியாங்குப்பம் கொம்யூன் கழக செயலாளர் இரா. ஆதிநாராயணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மணித். கோவிந்தராஜ், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ. சிவராசன், தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன், கவிஞர்.
கே.வெற்றிவேல், கவிஞர் கா. ஜெயந்தி, மாவட்டக் கழகத் துணைத் தலைவர் மு. குப்புசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஜிகினி.முகமது அலி, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, மாவட்டக் கழகக் காப்பாளர் இர.இராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [எம்] மாநிலச் செயலாளர் சு. இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற மாநிலத் துணை செயலாளர் வி.இளவரசி சங்கர் ஆகியோர் பொங்கல் விழாவின் தேவை குறித்தும், பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தும் உரையாற்றினர்.
திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவராகப் பயின்று தந்தை பெரியார் அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவரும், வாய்ப்பு கிடைத்த பொழுது அய்யா அவர்களின் மூத்திர வாளியியைச் சுமந்ததைப் பெரும் பேறாகவே கருதியவரும், தந்தை பெரியார் தலைமையில் தன் வாழ்க்கைத் துணையாக திருமதி. இலலிதா அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவரும், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரியுமான பெரியார் பெருந்தொண்டர் கே. வி. இராசன் 88 ஆவது பிறந்தநாள் விழா பொங்கல் விழாவில் இணைத்து கொண்டாடப்பட்டது.
கழகத் தோழர்களின் பலத்த கரவொலியுடன் பிறந்தநாள் விழா கேக்கினை கே.வி.இராசன் வெட்டி அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. கழகப் பொறுப்பாளர்கள் அய்யா அவர்களுக்கு பயனாடை அணிவித்து தங்களுடைய அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
பொங்கல் விழாவில் புதுச்சேரி நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் எஸ். கிருட்டிணசாமி, மு.ஆறுமுகம், சு. துளசிராமன், களஞ்சியம். வெங்கடேசன், பாகூர் கொம்யூன் கழகச் செயலாளர் இராம.சேகர், திராவிட தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார், பகுத்தறிவாளர் கழக தோழர் இரா.திருநாவுக்கரசு, டைலர் வெற்றிவேல், வில்லியனூர் சுந்தர்,மேனாள் காவல்துறை ஆய்வாளர் வீர. பாலகிருஷ்ணன், அனிதா பாலகிருஷ்ணன், முருகேசன், ஜே.கணேஷ், குணசேகரன், சீனு. சந்திரசேகரன், லோ.அருள், சத்தியவதி, ஜெ.ஜெயந்தி, க.ஷோபா . பெரியார் பிஞ்சுகள் எஸ். சம்யுத்தா, தி.ஆதிரா,க. வாசுகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக செயலாளர் தி.இராசா நன்றி தெரிவித்தார்.