சேலம், ஜன. 13- சேலம் மாவட்ட கழகக் காப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் அவர்களின், 85 ஆவது பிறந்தநாள் விழா 20/12/2024 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு, சேலம் – தந்தை பெரியார் சிலை முன்பாக, சேலம் மாவட்ட திராவிடர் கழகம் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடியது.
சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர மேயர் ஆ. இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.
தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு, தந்தை பெரியார் சிலை அருகே புதிதாக நிறுவப்பட்டுள்
ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை காப்பாளர் கி.ஜவகர் – விசாலாட்சி இணையர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து, பிறந்தநாள் கேக் வெட்டியும், தோழர்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
சேலம் மாநகர மேயர் ஆ..இராமச்சந்திரன், காப்பாளரின் குடும்பத்தினர் அய்.பாஸ்கர் தாஸ் – உமா மகேஸ்வரி, அய்.காமராசு – கண்மணி, அபிராமி – கிஷோர் குமார், காப்பாளரின் உதவியாளர்கள் பரமசிவம், வாசுதேவன், தலைமை கழக அமைப்பாளர்கள் க நா பாலு, ஊமை ஜெயராமன், ஆத்தூர் சுரேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மேட்டூர் மாவட்ட காப்பாளர் பழனி புள்ளையண்ணன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, மாவட்டச் செயலாளர் சி பூபதி, இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் லோகநாதன், மேட்டூர் மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன்,மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட்டின மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கலைவாணன், ஓமலூர் சவுந்தரராஜன், மகளிர் சுயமரியாதை அறக்கட்டளை நிறுவனர் புவனேஸ்வரி, அழகாபுரம் முரளி, பெரியார் பற்றாளர் உதயசூரியன், மாநகரத் தலைவர் இளவரசன், செயலாளர் இராவண பூபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழர் தலைவர், செயலாளர் பா விஜய், துணைச் செயலாளர் சக்திவேல், மேனாள் தலைவர் இளவழகன், மேனாள் செயலாளர் வைரம், பொதுக்குழு உறுப்பினர் கமலம், மகளிர் அணி தோழியர் சுஜாதா தமிழ்ச்செல்வன், தாதகா பட்டி செயலாளர் சீனிவாசன், அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், செயலாளர் இமயவரம்பன், வழக்குரைஞர் செல்வகுமார், வீ.மணிமாறன், தலைவர் மூணாங்கரடு சரவணன், ஆத்தூர் செல்வம், ரமேஷ் உள்ளிட்ட தோழர்கள் ஜவகருக்கு பயனாடை அணிவித்து, பிறந்தநாள் வாழ்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
கழக காப்பாளரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு அய்ம்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். விழாவை, கொள்கை விழாவாக சேலம் மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. மாவட்டச் செயலாளர் சி. பூபதி நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது.