சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக தகுதியுள்ள வழக்குரைஞர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வல்,பி.சி.அய்.சேர்மன் மணன்குமார் மிஸ்ரா ஆகியோரை பார் கவுன்சில் துணைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், பார்கவுன்சில் துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன், பார்கவுன்சில் உறுப்பினர்கள் கே.பாலு, ஆர்.அய்யாவு, அசோக், தாளமுத்தரசு, சிறீமுருகா ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் நா.மாரப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூட்டமைப்பின் சார்பில் பொருளாளர் க.முரளிபாபு ஆகியோர் சந்தித்து பார்கவுன்சில் சார்பிலும் கூட்டமைப்பின் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை பார் கவுன்சில் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books