தோழர் நல்லகண்ணு பற்றிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு!

1 Min Read

சென்னை, ஜன.12- பத்திரிகையாளர் மணா, நூற்றாண்டைத் தொட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஆர்.நல்ல கண்ணுவின் களப் போராட்டங்கள் பற்றி ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார்.

இந்நூல், சென்னை, நந்தனத்தில் உள்ள தோழர் நல்லகண்ணுவின் வீட்டில் வெளியிடப்பட்டது. டாக் டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரான முனைவர் குமார் ராஜேந்திரன் வெளியிட, இதனை தோழர் நல்லகண்ணு பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான டி. ராஜா அடுத்த பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது நூலாசிரியரும், எழுத்தாளருமாகிய மணா, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியின் நிர்வாகி அனீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *