கோலாலம்பூர், ஜூலை 19 – மலேசிய திராவிடர் கழகத் தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மலேசியா கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் Hotel stay with Bintang விடுதியில் 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி யளவில் நடைபெறும்.
மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை தலைமையில் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ருமாகிய டத்தோ சிறீ மு.சரவணன் பொதுக் குழுவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொதுக்குழு நிறைவில் சிறப்புரை ஆற்றுகிறார்.