பா.வீரமணி எழுதிய “நாக்கவுட் – வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள்” நூல் விமர்சனக் கூட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 19 – வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் என்ற நூலின் விமர்சனக் கூட்டம் கடந்த 22.6.2023 அன்று 6.30 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் வழக்குரைஞர் வீரமர்த் தினியின் வரவேற்புரையுடன் தொடங்கியது.

கூட்டத்திற்கு கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், வடசென்னை யின் முக்கியத்துவத்தையும் அங்கு வாழ்ந்த வீரர்களைப் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டார். குறிப் பாக என்.ஆர்.சாண்டோ மாஸ்ட ரின் திறமையையும், அவர் திரா விடர் கழகத்துடன் கொண்டிருந்த உணர்வைப் பற்றியும் சுவைபட விளக்கமாக பேசினார். அடுத்து திரைப்படக் கலைஞர், அப்துல் கலாம் ஆசாத் பேசினார். தென் னிந்தியாவின் சாம்பியன் சித்தேரி முத்துவைப் பற்றி நூலிலுள்ள குறிப்புகள் பல கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், நூலில் அறியாத பல தகவல்கள் அடங்கியதாக உள்ளது என்றார்.

அரசியல்

கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தம் உரையில், வடசென் னையின் அறிய முடியாத தகவல் கள் நூலில் உள்ளன என்றும், கிரிக்கெட் மாயையில் மூழ்கியுள்ள வர்களுக்கு ஒரு மாற்றுத் திசையை காட்டுவதாக நூல் உள்ளது என்றும், நூலாசிரியர் பா.வீரமணி அவர்கள், மார்க்ஸ், சிங்காரவேலர் பற்றிய சிந்தனையாளர் என்பதை நன்கு அறிந்திருந்த எனக்கு, அவ ரது மற்றொரு பக்கத்தை (குத்துச் சண்டை கலையைப் பற்றிய அறிவு) காட்டுவதாக நூல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பன்னாட்டு குத்துச்சண்டையில் வாகையர் பட்டம் பெற்றவரும், ஒன்றிய அரசின் அர்ஜுனா விரு தைப் பெற்றவருமான தேவராஜன் தம் பேச்சில், தமிழ்நாட்டின் குத்துச் சண்டை வீரர்களைப் பற்றி நிறைய தகவல்களுடன், வரலாற் றுப் பார்வையில் முதன் முதலாக வெளிவந்த நூல் இந்நூலே என் றும், நூலை படித்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு அனைத்தும் அருமையாகக் காட்சிப்படுத்தப் பட்டு உள்ளதென்றும், பல வீரர் களை நாக்கவுட் செய்த தன்னை இந்நூல் நாக்கவுட் செய்துவிட்ட தாகவும் கூறினார்.

குத்துச் சண்டை ஒரு பெரிய கலை

குத்துச்சண்டையில் எண்பது களில் வாகையராக விளங்கியவரும், இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவருமான எம்.பக்த வத்சலம் தம் உரையில், குத்துச் சண்டை ஒரு பெரிய கலை என்றும், குத்துச் சண்டை உடலை உறுதி யாக வைத்துக்கொள்ள உதவுவ துடன் தன்னம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதா கவும் கூறினார்.

நூலாசிரியர் பா.வீரமணி தம் ஏற்புரையில், கடும் பயிற்சியும் முயற்சியும், தன்னம்பிக்கையும் ஒரு வீரருக்குச் சிறந்த அடிப்படைப் பண்புகளாக இருப்பினும், மூளையை நன்கு பயன்படுத்து பவரே சிறந்த வீரராக விளங்குவார் என்றும், விளையாட்டும் செக்சும் ஒரு மனிதனுக்கு மிக இன்றியமை யாதவை என்று ப்ராய்டு கூறியிருப் பதை நினைவூட்டி, தந்தை பெரியார் அக்காலத்திலேயே குத்துச்சண் டைச் கலையை ஊக்குவிக்கும் பொருட்டு 1943இல் சித்தேரி முத்துவுக்குத் “திராவிட வீரன்” என் னும் பட்டம் அளித்ததை எடுத்துக் கூறினார்.

இறுதியில் வெங்கடேசன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறை வுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *