ஈரோடு, ஜூலை 19 தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நலச்சங்கமானது மருந்தியல் துறையில் சிறந்து விளங்கும் மருந்தாளுநர்களை இனம் கண்டு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இவ்வாண்டிற்கான விருது வழங்கும் விழா ஈரோடு மாவட்டத்தில் 16.07.2023 அன்று நடைபெற்றது. இதில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்கியமைக்காக பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை மற்றும் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மா யில் ஆகியோருக்கு வாழ்நாள் சாத னையாளர் விருது, துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்திக்கு, சிறந்த கல்வியாளருக்கான விருது, முனைவர் இரா. இராஜகோபாலனுக்கு, சிறந்த ஆராய்ச்சியாள ருக்கான விருது, பேராசிரியர் ச. இராஜேசுக்கு சமூக நல மருந்தாளுநர் விருது, பேராசிரியர் எம்.கே.எம். அப்துல் லத்தீஃப்பிற்கு கல்வியாளருக்கான விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும் கல்லூரி அளவில் ஆண் கள் பிரிவில் முதுநிலை மருந்தியல் கல்வியில் சிறந்த மாணவர் விருதை சி. வேலுமணி மற்றும் பெண்கள் பிரிவில் ஆர். ஸ்ருதி ஆகியோர் பெற்றனர். ஆண்கள் பிரிவில் இளநிலை மருந்தியல் கல்வியில் சிறந்த மாணவர் விருதை ஏ. முகமது ஷிபாக் மற்றும் பெண்கள் பிரிவில் கே. ருவைத்தா ஆப்ரின் ஆகி யோர் பெற்றனர். ஆண் கள் பிரிவில் மருந்தியல் பட்டயப் படிப் பில் சிறந்த மாணவருக்கான விருதை ஜே. முகமது கனி மற்றும் பெண்கள் பிரிவில் ஜா. நூருல் ஜாஸ்மின் அவர் களும் பெற்றனர். மருத்துவர் சி.கே. சரஸ்வதி, தமிழ்நாடு மாநில மருந்தியல் கழக பதிவாளர் எம். தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நலச்சங்கத் தலைவர் கார்த்திக் வழங்கி சிறப்பித்தனர்.