தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம்

viduthalai
3 Min Read

கொடுங்கையூர், ஜன. 10- தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் – வைக்கம் முழக்கம் – தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி -பாராட்டு – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் -கழகப் பொதுக் கூட்டம் 6.1.2025 அன்று கொடுங்கையூர் கட்டபொம்மன் தெருவில் வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இக்கூட்டத்திற்கு மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு தலைமை வகித்தார். கொடுங்கையூர் கழக அமைப்பாளர் கோ.தங்கமணி அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் தொடக்க உரையாற்றினார்.

வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், 34ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் கே.வி.இராசன், 34 ‘அ’ வட்ட தி.மு.க. செயலாளர் என்.கார்த்திபன் ஆகியோர் பேசினர்.
மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு பேசுகையில், வைக்கம் போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிரான போரில் ஆதிக்க சக்திகளை முறியடித்து வெற்றி வாகை சூடி “வைக்கம் வீரர்” எனப் பாராட்டப்பட்ட வரலாற்றை விளக்கிப் பேசினார்.

போராட்டம் ஏன்?

கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி உரை யாற்றுகையில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது செய்யப்பட்டு முறையான நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டும் சில கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏன்? ஆளுநர் தானே பொறுப்பேற்க வேண்டும். சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் உரையாற்றாமல் சென்றது ஏன்? எப்படி அவர் அந்தப் பதவிக்குரிய ஊதியம் பெறலாம்? உடனடியாக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளபோது, மேலும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக நியமிப்பதா? இதனை கண்டிக்கின்ற வகையிலே சென்னையில் வரும் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடை பெறுகிறது. அடிமைத்தனத்தை உடைத் துப் பெண்களுக்காகப் பாடுபட்டு உரிமை பெற்றுத் தந்த தலைவர் தந்தை பெரியார்” என்று குறிப்பிட்டார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையில், “பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் மதத்தின் பாற்பட்டு நடைபெற்றபோது, புரியாமல் இருந்த பெண்களுக்குப் புரிய வைத்து உரிமைகளை பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். பெண்களே படித்திருந்தும் வேலைக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பெண்களுக்கு எற்பட்ட சுயமரியாதை உணர்ச்சிக்குக் காரணம் தந்தை பெரியார்.

பெண்கள் சமூகம் கல்வி பெற்று முன்னேற வேண்டுமென்பதற்காக நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாடு அரசு மீது குறைகூறிக் கொதித்தெழுந்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் அண்ணாமலை மணிப்பூரில் அல்லவா சென்று அடித்துக்கொள்ள வேண்டும்! ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்த, அகற்றிடத் துடிக்கின்ற ஆதிக்க சக்திகளின் முயற்சி வெற்றி பெறாது. மீண்டும் ஆட்சியில் அமரப் போகின்ற திராவிட மாடலுக்கு வீழ்ச்சியில்லை” என பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினார்.
பங்கேற்றோர்

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, கொடுங்கையூர் காமராசர் சாலை மற்றும் கட்டபொம்மன் தெருவில் கழகக் கொடி கம்பங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன.

சிறப்புரையாளர்களுக்கும், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு கொடுங்கையூர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. 34ஆவது வட்ட தி.மு.க. சார்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கப்பட்டது.

மக்கள் ஆர்வத்தோடு சொற்பொழிவா ளர்களது உரையினைக் கேட்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாசுகர், இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன், மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர் ச.இராசேந்திரன், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு, முத்தமிழ் நகர் கழக அமைப்பாளர் வி.இரவிகுமார், கு.வீரா, மாணவர் கழகம் சஞ்சய், தங்க.தனலட்சுமி, வா.விமலா, சி.மெர்சி ஆஞ்சலாமேரி, க.செல்லப்பன், பெரம்பூர் ஜோதி ராமலிங்கம், கி.ரத்தினவேல், கொடுங்கையூர் கோ.சுந்தரமூர்த்தி, ஓட்டேரி கார்த்திக், ஜெயகாமராஜ், ஜெ.பார்த்தசாரதி உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக கண்ண தாசன் நகர் கழக அமைப்பாளர் க.துரை நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *