மேல்மருவத்தூர் அம்மாவுக்கு உபயம்! பேருந்து கவிழ்ந்து 4 பக்தர்கள் மரணம்!

viduthalai
1 Min Read

ராணிப்பேட்டை, ஜன.10 மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கருநாடகா நோக்கி சென்றுக்கொண்டி ருந்த பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிக் கிடந்த 16 டன் காய்கறிகளை மூட்டைமூட்டையாக அப்பகுதி மக்கள் அள்ளிச்சென்ற நிகழ்வு பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், கருநாடக மாநிலம் கோலார் மாவட்டம் முன்பாகல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர், வழிபாட்டை முடித்துவிட்டு, 4 பேருந்துகளில் 8.1.2025 அன்று இரவு ஊர் திரும்பி உள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சென்னை – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செல்லும்போது பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும், ஆந்திராவில் இருந்து வந்த ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பக்தர்கள் பயணித்த பேருந்தும் காய்கறி வாகனமும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த கோர சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் இந்த விபத்தில் காய்கறி வாகனம் கவிழ்ந்ததில் சுமார் 16 டன் காய்கறிகள் சாலையில் சிதறிக் கிடந்தன. இதை மூட்டை மூட்டையாக அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *