கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை அடக்கிய வீரர் – மக்கள் பாராட்டு!

1 Min Read

கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் வாலை பிடித்து வலையில் சிக்க வைத்த இளைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரங்காபுரா கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க போராடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர் துணிச்சலுடன் சிறுத்தையின் வாலைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விரித்த வலையில் சிக்க வைத்தார். கெரேகோடி ரங்காபுரா கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறையினரின் வலையில் சிக்காமல் தப்பிய நிலையில், இளைஞரின் தைரியத்தால் பிடிக்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *