கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை அடக்கிய வீரர் – மக்கள் பாராட்டு!

1 Min Read

கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் வாலை பிடித்து வலையில் சிக்க வைத்த இளைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரங்காபுரா கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க போராடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர் துணிச்சலுடன் சிறுத்தையின் வாலைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விரித்த வலையில் சிக்க வைத்தார். கெரேகோடி ரங்காபுரா கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறையினரின் வலையில் சிக்காமல் தப்பிய நிலையில், இளைஞரின் தைரியத்தால் பிடிக்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *