வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக வல்லம், பேருந்து நிலையப் பகுதியில் (Swachh Bharath) ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் என்.சி.சி. கமாண்டில் ஆபிசர் கர்னல் டி.பி.ராய் தலைமையில் 28.09.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் என்.சி.சி அலுவலர் லெப்டிணன்ட் ஆர்.விவேக் வல்லம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி இரண்டாம் நிலை அலுவலர் ரமேஷ் பிரகாஷ் ஆகியேர் கலந்து கொண்டனர். பெரியார் பாலிடெக்னிக் என்.சி.சி மாணவர்கள் மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 50 பேர் இந்திகழ்வில் கலந்து கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல்
Leave a comment