மோமின் சேக் என்ற தமிழ் இஸ்லாமியர் கணினி மென்பொருள் படித்துவிட்டு அங்குள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
ஜூன் 2 ஆம் தேதி புனேவில் உள்ள ஹடப்சர் பகுதியில் கடைசி தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது 20 பேர்கள் கொண்ட ஹிந்து ராஷ்டிரா சேனா என்ற அமைப்பினாரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
காரணம் அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டிருப்பார் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்தார்களாம். இந்தப் படுகொலை தொடர்பாக எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை. மாறாக, ஹிந்து அமைப்புகள் இதை ஒரு புண்ணிய செயலாக மேடை போட்டுப் பேசினார்கள். அதன் பிறகுதான் கொலைகளைச் செய்ய ஹிந்து அமைப்புகள் துணிச்சலுடன் களமிறங்கினர்.
மோமின் சேக் கொலை தொடர்பாக கைதான 20 பேருமே சில நாள்களிலேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர். 2023 வரை நடந்த இந்த வழக்கில் 28.01.2023 அன்று புனே மாவட்ட நீதிமன்றம் சாட்சிகள் சரியில்லை, குற்றம் நடந்தற்கான காணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று கூறிவிட்டது
அதே ஹிந்து அமைப்பின் தலைவன் தனஞ்சய் தேசாய் 22.08.2023 அன்று புனே மாவட்டத்தில் உள்ள முஷில் என்ற தாலுகாவில் வசித்த ஏழை இஸ்லாமிய விவசாயியின் நிலத்தை அவர் பெயருக்கு மாற்ற – ஹிந்து தலைவர்களை இழிவுபடுத்துகிறார் என்ற பெயரில் அவரை அடித்து உதைத்து விரட்டிய வழக்கில் கைதாகி மீண்டும் விடுதலை ஆனார்.