புவனகிரி, செப். 4- கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் புவனகிரி பெரியார் பெருந்தொண்டர் கலிய பெருமாளின் இறுதி நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் கலந்து கொண் டனர்
புவனகிரி கள்ளிக் காட்டு தெருவை சேர்ந்த கலியபெருமாள் (வயது 95). இவர் திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார் காலம் தொட்டு இன்று வரை இயக்கத்தோழ ராக இருந்து வந்தார்.
கழகம் நடத்திய அனைத்துப் போராட் டங்களிலும் கலந்து கொண்டவர்
கலியபெருமாள் உடல்நிலை சரியில்லாமல் கடந்த இரண்டு மாத காலமாக வீட்டிலேயே இருந்தார். 31.8.2024 அன்று மறைந்தார்.
செய்தி அறிந்து மாவட்ட கழக தலை வர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் கழக சொற்பொழிவாளரும் மாவட்ட இணை செயலாளருமான யாழ்.திலீபன், மாவட்ட துணைத் தலைவர் மழலை கோ.வி.பெரியார்தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், நகர செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர் ராமதாஸ், பெரியார் பெருந்தொண்டர் ஆசிர் வாதம் ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.