மருதூர் தெற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திருத்துறைப்பூண்டி மாவட்ட கழக தலைவர்
ஆர்.எஸ்.சீனிவாசன் மனை வியும், திருத்துறைப்பூண்டி சாரதி மருத்துவமனை டாக்டர் எஸ்.சதாசிவம், பட்டுக்கோட்டை மாலா சிவக்குமார் இவர்களது அன்பு தாயாருமாகிய திருமதி சீனு.செல்வி அம்மையார் (72) நேற்று (28.08.2024) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த மனத் துயரத்தோடு அறிவிக்கின்றோம். அம்மையாரது இறுதி ஊர்வலம் இன்று (29.08.2024) வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் மருதூர் தெற்கு ச.குமரவேல் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டது என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அறியவும் தொடர்புக்கு: 94422 64381
கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
மறைந்த சுயமரியாதை சுடரொளி இராச.சீனுவாசன் அவர்களின் துணைவியார் சீனு.செல்வி அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் மு.அய்யப்பன், இளைஞரணி செயலாளர் கி.சுர்சித், திருத்துறைப்பூண்டி நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகர செயலாளர் ப.நாகராஜன், கி.வேதநாயகி, ஆகியோருடன் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.