ஆத்தூர், ஆக.24 தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நேற்று (23.8.2024) காலை 10.30 மணி அளவில் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் முனைவர் சு.ராஜா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் கு.செல்வராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வெ. முரளிதரனும், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு.முருகேசனும் வாழ்த்துரை வழங்கினர்.
பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டியில் ஆத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தேவியாக்குறிச்சி, பாரதியார் கல்வியியல் கல்லூரி தேவியாக்குறிச்சி, பாவேந்தர் கலை அறிவியல் கல்லூரி வடக்கு மணிவிழுந்தான், பாவேந்தர் கல்வியியல் கல்லூரி, ஏ.இ.டி. கலை அறிவியல் கல்லூரி நரசிங்கபுரம், ஜெம்கேட்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கொத்தாம்பாடி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஆத்தூர் சாரதா கல்வியியல் கல்லூரி, ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 10 மாணவர்களும், 45 மாணவிகளும் மொத்தம் 55 மாணவ, மாணவியர்கள் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பேசினர்.
மாணவர்கள் தந்தை பெரியார் செய்த புரட்சிகள் குறித்தும், பெரியாரின் சுய சிந்தனைகள் குறித்தும், பெரியார் பிறவாமல் இருந்திருந்தால் நாம் என்ன இழிநிலையோடு இருந்திருப்போம் என்பது குறித்தும், என்றென்றும் தேவை பெரியார் என்பதை தெள்ளத் தெளிந்த நடையில் தெரிந்து தேர்ந்து உரைத்தனர். ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறையைச் சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு உதவிப்பேராசிரியர் தமிழ்த் துறையைச் சார்ந்த முனைவர் மு.முருகேசனும், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணனும், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் அ.அறிவுச்செல்வனும், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை அமைப்பாளர் மருத.பழனிவேல் ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டனர்.
பாவேந்தர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ச.கவுசல்யா முதல் பரிசு பெற்றார். ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம் மாவட்டச் செயலாளர் அறிவுச்செல்வம் பரிசுத்தொகை ரூ3000 வழங்கினார்.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி கோ.ரேணுகா இரண்டாம் பரிசு பெற்றார். அவருக்கு ஆத்தூர் தந்தை பெரியார் அறக்கட்டளையைச் சார்ந்த ஆறுமுகம் ரூபாய் ரூ2000 பரிசுத்தொகை வழங்கினார்.
பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரியைச் சார்ந்த சு.பூஜா மூன்றாம் பரிசு பெற்றார் அவருக்கு ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் ரூ1000பரிசுத்தொகை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வெ.முரளிதரனும், உதவிப் பேராசிரியர் முனைவர் மு.முருகேசனும் பரிசினை வழங்கி சிறப்பித்தனர்.
கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் முனைவர் குமார், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் வசந்தா, தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் முனைவர் இரா.ரவி, தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் முனைவர் வேலுச்சாமி, ஆங்கிலத் துறை கவுரவ விரிவுரையாளர் குணசேகரன், விலங்கியல் துறை கவுரவ விரிவுரையாளர் பரமேசுவரன் ஆகியோரும், பிற கல்லூரி பேராசிரியர் பெருமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆத்தூர் கழக மாவட்ட காப்பாளர் அ.தங்கவேல், மாவட்டக் காப்பாளர் இரா.விடுதலைச் சந்திரன், ஆத்தூர் கழக மாவட்டச் செயலாளர் புத்தூர் நீ. சேகர் , ஆத்தூர் தந்தை பெரியார் அறக்கட்டளை அ.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்துணை அமைப்பாளர் மருத.பழனிவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ச வினோத், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஆசிரியர் அ.அறிவுச்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் வ.முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் (ஆசிரியர் பிரிவு) வ.தமிழ் பிரபாகரன்ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியை தமிழ்த்துறை கவுரவ விரி வுரையாளர் முனைவர் சு.ராஜா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி உரை கூறி இனிதே நிறைவுற்றது.