சென்னை கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (19.8.2024) மாலை சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் அவர்களின் வாழ்விணையர் திருமதி தயாளு அம்மாள் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக தமிழர் தலைவரை கலைஞரின் மகள் செல்வி அவர்கள் வரவேற்றார்.