தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக திரு.என்.முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு முக்கிய நியமனம் ஆகும்!
தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரியான திரு.என்.முருகானந்தம் அவர்கள், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று, மிகத் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர்.
மிக ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தவர் என்ற பின்னணி என்றாலும், ‘‘தகுதி – திறமை‘‘, நேர்மை, ஆளும் திறனில் மிகச் சிறந்து, கடும் உழைப்பாலும், நாணயத்தாலும் உயர்ந்தவர்.
தக்காரைத் தக்க வகையில் அடையாளம் கண்டு பயன்படுத்திக் கொள்ளும் ஆளுமைத் திறன் நமது முதலமைச்சர் – ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகரின் தனித்தன்மையாகும்.
‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’’ (516) என்ற குறள்மொழிக்கேற்ப அவரைப் பொறுப்பில் அமர்த்தியுள்ளார். சமூகநீதியின் வெற்றியும் இதில் பொதிந்திருக்கிறது.
புதிய (50 ஆவது) தலைமைச் செயலாளரான ஆற்றல்மிகு திரு.என்.முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
‘திராவிட மாடல்‘ முதலமைச்சருக்கு நமது நன்றி கலந்த பாராட்டுகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
20.8.2024