சென்னை, ஆக. 11- சுயதொழில் தொடங்குதல் மற்றும் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் 1 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்குக்கு பெண்கள் பெரும் பங்காற்றுவதாக ஆய்வுகளில் தகவல்!
< இந்தியாவில் தொழிற் சாலைகளில் பணியாற்றும் பெண்களில், 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்!
< தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் (35 விழுக்காடு) தேசிய சராசரியை விட அதிகம்!
< தமிழ்நாட்டில் உள்ள 4,400 ஸ்டார்ட் அப்-களில் குறைந்தது 1 பெண் ஆவது துணை நிறுவனராக பதவி வகிக்கிறார்!
< 5,550 பெண்களுக்கு இந்த ஆண்டு கற்பனைத் திறன் மேம்பாடு, தொழில் தொடங்க பயிற்சிகள் வழங்கப்பட்டன!
< பெண்கள் மட்டுமே பணிபுரியும் 5 தொழில் பூங்காக்கள் TANSIDCO-ஆல் நிறுவப்பட்டுள்ளது.
< பெண்களால் தொடங்கப்பட்ட 51 ஸ்டார்ட்அப்-க்கு TANSEED மூலம் நிதி வழங்கப்படுகிறது!
< அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 288 பெண்களுக்கு ரூ.62.87 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன!