காரைக்குடி கழக மாவட்டத் தலைவர் கு.ம.வைகறைதாசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி இணையரின் மகள் யாழிசை பிறந்த நாளையொட்டி, அவருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். என்.சி.சி. பயிற்சியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்று, சுதந்திர தின நிகழ்ச்சியில், டில்லியில் கலந்து கொள்ள இருப்பதற்கும் யாழிசைக்கு கவிஞர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். (11.08.2024, காரைக்குடி).