தஞ்சை, ஆக. 7- 5.8.2024 அன்று மாலை 6 மணிக்கு குறள் நெறியாளர் கு. பரசு ராமன் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புரவலர் பி.எஸ்.ஆர் மாதவராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் தியாகராஜன் படிப்பகத் தலைவர் வெள்ளூர் சோ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வாசகர் வட்டச் செயலா ளர் இரா. செந்தூர பாண் டியன் வரவேற்புரை ஆற் றினார்.
வாசகர் வட்ட உறுப் பினர்கள் ஆடிட்டர் சி.எம்.சரவணன், ப.விஜயகுமார், கட்டட கலைஞர் முத்து கிருஷ்ணன், புலவர் இரா.மோகன்தாஸ், ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அலுவலர் சிவராமன், கரம்பயம் சா.நேரு, பாதுகாவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன் ரூபாய் ஆயிரத்திற்குரிய சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவித்தது ஏன்?, சுயமரியாதைச் சுட ரொளிகள் புத்தகங்களை வழங்கினார்.
36 ஆண்டுகள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி 31.7.2024 அன்று ஓய்வுபெற்ற நெடுவாக்கோட்டை பொறியாளர் ந.நேருவுக்கு வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பி.எஸ்.ஆர் மாதவராஜ், தியாகராஜன் இருவரும் சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.
10.8.2024 அன்று கழக துணைப் பொது செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பங்கேற் கும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. வாசகர் வட்டப் பொருளாளர் கு.குட்டி மணி நன்றி கூறினார்.