ஆரணி, ஜூலை 27- ஆரணியில் 12.07.2024 மாலை 05.30 மணியளவில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பயண நிகழ்வு நடைபெற்றது.மேனாள் மாவட்ட செயலாளர் சேத்பட் அ.நாகராசன் தலையேற்க மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அசோகன் முன்னிலையில் மேற்கு ஆரணி நகர்மன்ற தலைவர் ஏ.சி.மணி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கழக துணைபொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்சியில் விசிக நகர செயலாளர் ரமேஷ் கலந்துகொண்டு நீட் எதிர்ப்பு ஏன்? புத்தகம் 200 பெற்றுக் கொண்டார். திமுக சார்பில் 200 படிகள் கழகத்தின் சார்பில் 100 படிகள் மொத்தம் 500 புத்தகங்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் திமுக, விசிக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு நகர கழக தலைவர் தி.காமராஜ், மாவட்ட செயலாளர் பொன் சுந்தர் சீனு, ஆரணி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரச்சார குழுவினருக்கு சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.