தஞ்சை, ஜூலை 26 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெரியார் விருது வழங்கி நாடகவேள் என்ற பாராட்டப்பட்ட தஞ்சை காவேரி அன்னை நாடக கலை மன்றம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் 54 ஆம் ஆண்டு நாடக விழா கடந்த ஒரு வார காலமாக தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. 25.07.2024 அன்று இரவு 7 மணி அளவில் நடைபெற்ற நாடக விழாவில் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் காவிரி அன்னை கலை மன்ற சட்ட ஆலோ சகர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழகத் தலைவர் தலையாமங்கலம் இரா. துரைராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா. வீரக்குமார், மாநிலக் கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.குண சேகரன், இரா.ஜெயக்குமார், தஞ்சை பூபதி அவர்களின் வாழ்விணையர் காவேரி அன்னை கலை மன்ற நிர்வாக செயலாளர் ரூபாவதி பூபதி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் சிறப்புரையாற்றினார்.
தஞ்சை காவேரி அன்னை கலை மன்ற நிறுவனர் நாடகவேள் மா.வீ.முத்து நன்றி கூறினார். தொடர்ந்து சமூக நாடகங்கள் நடைபெற்றன
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, வி.கே.என். குணசேகரன், பெரியார் செல்வன் உள்ளிட்ட ஏராளமான ரசிக பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.