தந்தை பெரியார் பற்றாளரும் இயக்க ஆதரவாளருமான அரியலூர் மேகலா அச்சக உரிமையாளர் ரெகுநாதன் (வயது 94) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் அவரது இல்லம் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்தனர் (7.7.2024).