லக்னோ, ஜூலை 4- உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான நிகழ்வு நாடெங்கிலும் பெரும் சோகத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இது முதல் முறையல்ல. கோவில்கள் மற்றும் மத கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த நிகழ்வுகள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.
அப்படி சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் நடந்த இத்தகைய பெரும் அவலங்களின் பட்டியலை இங்கே காணலாம்.
மார்ச் 31, 2023- மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள கோவிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கோவிலில் உள்ள பழங்கால கிணற்றின் மேல் கட்டப்பட்ட ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 1, 2022:– காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற மாதாவைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அக்டோபர் 13, 2013:- மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோவில் அருகே நவராத்திரி விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பக்தர்கள் கடந்து செல்லும் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக வதந்தி பரவியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 14, 2011: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு என்ற இடத்தில் பக்தர்கள் மீது ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சபரிமலை பக்தர்கள் 104 பேர் உயிரிழந்தனர்.
மார்ச் 4, 2010: உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிருபாலு மகாராஜின் ராம் ஜான்கி கோவிலில் மக்கள் இலவச ஆடைகள் மற்றும் உணவுகளை பெற கூடியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலியாகினர்.
செப்டம்பர் 30, 2008:- ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் வெடிகுண்டு வெடித்ததாக I வதந்தி பரவியதால் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலியாகி னர்
ஆகஸ்டு 3, 2008: இமாசலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட் டத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 162 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 25, 2005:- மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தர்தேவி கோவிலில் ஆண்டு யாத்திரையின் போது 340-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியாகினர். பக்தர்கள் தேங்காய் உடைத்தபோது சிலர் அதில் வழுக்கி படியில் தவறி விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.