(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குச் சாய்காலாகப் பேசினால், யாரையும் ஆகாயத்துக்குத் தூக்குவார்கள். ஒரு சிறு தூசு அளவு மாறாக நடந்தால் காலில் போட்டு மிதிப்பார்கள்.
‘துக்ளக்’ ஆசிரியர் ‘சோ’வாக இருந்தாலும் சரி, இன்றைய ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தியாக இருந்தாலும் சரி, இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
3.7.2024 நாளிட்ட ‘துக்ளக்’ இதழில் (பக்கம் 28) கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்துள்ளார்.
கேள்வி: எம்.ஜி.ஆரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
குருமூர்த்தி பதில்: தேச விரோத திமுகவின் கையில் ஏகபோகமாகச் சிக்கியிருந்த தமிழக அரசியலை மீட்ட பெரும் அரசியல் சமூக சக்தி எம்.ஜி.ஆர். – என்பதுதான் குருமூர்த்தி அய்யர்வாள் எழுதியுள்ள பதில்.
இதே எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் இருந்தபோதும் சரி, முதல் அமைச்சராக இருந்தபோதும் சரி என்னென்னவெல்லாம் பேசியிருக்கிறார்? எடுத்துக்காட்டுக்கு இதோ சில:
ஆஸ்திக சமாஜத்தில்
எம்.ஜி.ஆர். பேசியது என்ன?
ஆஸ்திக சமாஜத்தில் பேசும் போது (10.4.1976) நாத்திகத்துக்காக வாதாடுகிற வர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டிருக்கிற எம்.ஜி.ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனா? இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்திகம் பற்றியும், நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. இவர்களும் அந்த வாய்ப்பை எனக்குத் தந்ததில்லை – இனிமேல் தருவார்கள் என்று கருதுகிறேன். எனக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால், பொதுமக்களுக்குத் தெரி யாத எந்தக் கருத்தும், எத்தகைய தத்துவமும் வரவேற்பு பெற முடியாது
“பரலோகத்தில்” நம்பிக்கை உண்டா?
பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப் பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, ஈஸ் வரனை வணங்கப் போகிறோமா, நாதப்பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடு களாகக் கூறினார்களே – அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்கிறார்களா?
“கருமம்” எது?
நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். “கருமம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 76ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்ப வர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங் காக நிறைவேற்றுகிறார்கள்?
நான் வேதனையோடு சொல்கிறேன். ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடித்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந்தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன்.
நாத்திகர்கள் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லத்தான் ஆத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவங்களை மிகவும் தாக்கிப் பேசினார்.
எம்.ஜி.ஆர். குறுக்கீடு
அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலிபெருக்கியை பிடித்துக் கொண்டு “இடைமறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறி, “ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாத்திகர்கள் தரமாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.
நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர் பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை ஏன் தாக்க வேண்டும்?“
சமாஜத் தலைவர்: உண்மைதான்… உண்மைதான்…
எம்.ஜி.ஆர்.: ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள “ஆஸ்தி” என்பதற்கு “உள்ளது” என்று ஒரு பொருள் கூறப்படுகிறது. “உள்ளது” என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் “இல்லை” என்று மறுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள்.
சமாஜத் தலைவர்: உண்மைதான்… உண்மைதான்…
எம்.ஜி.ஆர்.: ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக்காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்.
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
நன்றி: ‘தென்னகம்’
– – – – –
சென்னை காமராஜர் திடலில் நடைபெற்ற இந்து சமய கலைவிழாவில் (3.4.1983) எம்.ஜி.ஆருக்கும், சங்கராச்சாரியாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது உரையில்:- நாகர்கோயிலில் இந்து முன்னணியினர் மாநாடும், ஊர்வலமும் ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாட்டில் டாக்டர் கரன்சிங் அவர்கள் கலந்து கொள்கிறார் என்று தெரிந்திருந்தும்கூட, அவற்றைத் தடை செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்ட தென்றால், அதற்குக் காரணம், அங்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டும் காரியங்கள் நடைபெற்றதுதான்.
அந்த மாநாட்டின் முக்கியஸ்தராக இருந்த தாணு லிங்க நாடாரை இன்றைக்கு வேறு ஒரு காரணத்திற்காக இந்துக்களே எதிர்க்கிறார்கள். இந்த நிலையில் இந்துக் களிடையே ஒற்றுமை எங்கே இருக்கின்றது என்று கேட்டார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
சங்கராச்சாரியார்
சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தம் உரையில் முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அசோசியேசன்கள் இன்றைய அவசியம் கருதி தோன்றியுள்ளன. அவை அவசியம் தேவை. அவற்றின் மீது வீணாகத் தப்புக் கணக்கு போட வேண்டாம். அவர்கள் ஒன்றும் கன்னியாகுமரியிலோ வேறெங்குமோ வன்முறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
யாரோ சொன்னார்கள் என்றெல்லாம் காதில் கேள்விப்பட்டதையெல்லாம் நம்பிக் கொண்டு அரசு காரியத்தில் இறங்கக்கூடாது. கூப்பிட்டு பேசி நடந்தது என்ன? என்று தீர விசாரித்த பிறகுதான் முடிவுக்கு வரவேண்டும்.
காரியத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சொன்னாரோ அதைப்போல காரியத்தை அவர் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார் சங்கராச்சாரியார்.
“குட்டக் குட்டக் குனியக்கூடாது” என்பதற்காகத் தான் இத்தகைய சங்கங்கள் இப்பொழுது தோன்றி யிருக்கின்றன.
(சங்கராச்சாரியின் பொய்யும், வன்முறைக்கான வக்காலத்தும் புரிகிறதா!?)
இந்த விழாவில் பங்கேற்ற முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்குச் சால்வையை தான் நேரடியாக அணிவிக்காமல் தன் சிஷ்யக்கோடி மூலம் அணிவிக்கச் செய்தார்.
இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ்.சுக்கு
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எச்சரிக்கை!
ஆர். எஸ்.எஸ்., இந்து முன்னணிகளுக்கு, தமிழக முதலமைச்சர் இன்று சட்ட மன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்தார். (29.3.1982)
“மக்களைப் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸின் நடவடிக்கை கள் உடனே நிறுத்தப்பட்டாக வேண்டும்; அரசு இதை அனுமதிக்காது” என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“மடாதிபதிகள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டுமே தவிர, வேறு வழிகளைப் பின்பற்றக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு சட்ட மன்றத்தில் கீழ்க்கண்டவாறு முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவு படுத்த நினைப்பதை -இந்த அரசு அனுமதிக்காது என் பதை தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்து கிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? என்று சிந்திக்க வேண்டும்.
இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல் லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ளவேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. (காஞ்சி சங்கராச்சாரியார் இந்து முன்னணிக்காரர்களையும், ஆர்.எஸ். எஸ்.காரர்களையும் தூண்டிவிட்டுப் பேசிவருவது வாசகர்கள் அறிந்ததே.)
நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத் தல் பயிற்சி கொடுக்கிறார்களே – அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண் டும். ஏற்கெனவே என்.சி.சி., – சாரணர் பயிற்சிகள் இருக் கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்றார்கள். தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்: அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.”
இவ்வாறு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது பதில் உரையில் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். ஏதோ பொதுக்கூட்டத்தில் பேசியதல்ல – சட்டப்பேரவையில் பேசியதுதான்.
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். டில்லி, தமிழ்நாடு அரசு மாளிகையில் இருந்தபோது, டில்லியைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முன் அனுமதியின்றி முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் வந்ததுடன், மண்டைக்காடு கலவரம் பற்றித் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தார்கள் – ஒரு கட்டத்தில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரிடமே கை கலக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதுதான் ஆர்.எஸ்.எஸின் ஒழுக்கமும் – கட்டுப்பாடும்? ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்குப் பொது இடத்தில் அனுமதி கிடையாது என்றும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்ததுண்டே!
ஆன்மிகத்தைப் பற்றியும், சங்கராச்சாரியார் பற்றியும், குருமூர்த்திகள் தலையில் தூக்கி வைத்துக் கும்மாளம் போட்டு ஆடும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களாக இருந்தாலும் சரி, இவை அனைத்தையும் எம்.ஜி.ஆர். கிழித்து எறிந்தாரே அவற்றையும் நினைவூட்டுகிறோம்.
எந்த மதம் என்றால் “திராவிட மதம” என்று சொல்லவேண்டும் என்று சொன்னார் என்பதை வசதியாக மறைக்கப்பார்க்கிறாரா குருமூர்த்தி அய்யர்வாள்?
உடல் நலம் குன்றிய நிலையில் பிற்காலத்தில் ஏதோ தடுமாற்றங்கள் காரணமாக இருந்திருக்கலாம். அவற்றை வைத்து மட்டும் பூதாகரப்படுத்தப் பார்க்கிறார்கள்!
பார்ப்பனர்கள் ஒருவரைப் புகழ்கிறார்கள் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்